பின்வரும் தகமைகள் எதிர்பார்க்க படுகின்றன:
• 2010ல் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
• எமது கல்லூரியில் ஆக கூடிய புள்ளிகளை பெற்று இருக்க வேண்டும்.
• எமது கிராமத்துக்கு உங்களால் செய்ய கூடிய சேவைகள் தொடர்பாக இரு பக்கங்களுக்கு குறையாத கட்டுரை ஒன்று எழுத வேண்டும்
• உங்கள் ஆக்கங்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய அனுமதிக்க படவேண்டும். .
• ஊக்குவிப்பு தொகை இரண்டு பிரிவுகளாக வழங்க படும். முதல் தொகை 5000/=
• பல்கலைகழகம் செல்லு முன் எமது கிராமத்துக்கு ஏதாவது ஒரு சேவையினை செய்துவிட்டு மிகுதி 5000/= பெற்று கொள்ளலாம்.
திரு மக்சிமஸ் லம்பேர்ட் அவர்கள் வங்காலை கிராமத்தின் கலை கலாச்சார வளர்ச்சியின் தந்தையாக மட்டுமன்றி ஒரு முற்போக்கு சிந்தனைவாதியாகவும் வாழ்ந்து காட்டியவர். எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு அவர் செய்த சேவைகள் காலத்தால் மறக்க முடியாதவை
அவரின் ஞாபகார்த்தமாக Roy Lambert மூலம் இந்த உதவி வழங்கப் படுகின்றது