பின்வரும் தகமைகள் எதிர்பார்க்க படுகின்றன:
• 2010ல் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
• எமது கல்லூரியில் ஆக கூடிய புள்ளிகளை பெற்று இருக்க வேண்டும்.
• எமது கிராமத்துக்கு உங்களால் செய்ய கூடிய சேவைகள் தொடர்பாக இரு பக்கங்களுக்கு குறையாத கட்டுரை ஒன்று எழுத வேண்டும்
• உங்கள் ஆக்கங்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய அனுமதிக்க படவேண்டும். .
• ஊக்குவிப்பு தொகை இரண்டு பிரிவுகளாக வழங்க படும். முதல் தொகை 5000/=
• பல்கலைகழகம் செல்லு முன் எமது கிராமத்துக்கு ஏதாவது ஒரு சேவையினை செய்துவிட்டு மிகுதி 5000/= பெற்று கொள்ளலாம்.
Dr John Mark, அவர்கள் எமது மண்ணையும் மக்களையும் மிக அதிகமாக நேசித்த, ஒரு சிலரில் முதல் இடம் பெறுபவர் ஆகும்.
எமது கிராமதுக்கு முதன் முதல் வீதி போட்டு எமது மக்கள் கஷ்டம் இன்றி போக்கு வரத்து செய்ய வழி செய்தவர்.
எமது மக்கள் கஷ்டம் இன்றி குடி நீர் பெற முதன் முதல் நீர் தாங்கிகளை அமைத்து கொடுத்தவர்.
1957 இல் மின்சாரம் கொண்டு வந்து எமது கிராமத்தின் இருள் நீக்கியவர். அவர் செய்த அளப்பரிய சேவைகளை ஒரு சில வரிகளில் எழுதி விட முடியாது.